Tuesday 16 August 2016

ஜோக்கர் ...


தம்பி முருகா, பரிதாபம் கொள்கிறேன்.
பிழைக்கும் வழியைப் பார்..
இந்த மானமற்ற கூட்டத்திற்காகவா படம் எடுக்கிறாய்..?
போ, கரம் மசாலா, கற்பழிப்பு, குத்துப்பாட்டு ,ஆத்தா சென்டிமென்ட் வைத்து படமெடு.
நீலாங்கரையில் வீடு வாங்கு..
ஆடி, ஆவணி கார் வாங்கு..
நல்லாயிரு ராசா...
வேணாம்யா, இந்த விளையாட்டு.
500 கொடுத்தால் கொலை செய்வான்.
1000 த்தை காட்டினால் தற்கொலை புரிவான்..
இந்த கேடு கெட்ட தமிழன்.
ஆனா ஒண்ணுய்யா.. தியேட்டர் காவலாளி வந்து "சார், படம் முடிஞ்சு போச்சு.. வெளியே வாங்க" ன்னாரு.
அந்த வெள்ளைத்திரையைப் பார்த்த பிறகுதான் நடக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment