Tuesday 16 August 2016

Joker - Official Jukebox | Sean Roldan | Raju Murugan

ஜோக்கர்‬

மேகிய தடை பன்னுனா சீனாவுக்கு பிடிக்கல
குளிர்பானத்த தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு 
பிடிக்கல,
ஹெலிகாப்டரா ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட
சொன்னா ஆளுங்கட்சிக்கு பிடிக்கல,
அரநாள் உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல,
சாதி மறுப்பு திருமணம் பண்ணி வச்சா
சாதிவெறியன்களுக்கு புடிக்கல
குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?
கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?
ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது
நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க
எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’
கக்கூஸ் கட்டுன காசு நாறாது
சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க
நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க
நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?
இது போன்ற வசனத்துக்காகவும்
அரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பரேட்கள் சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட
மோடியின்கிளீன் இந்தியா திட்டத்தின்
உண்மை தன்மையை கிழி,கிழி என கிழித்தமைக்காகவும. பல இடங்களில் அம்பேத்கர் ,பெரியார் ,பகத்சிங் போன்ற
முற்போக்காளர்களின் புகைப்படம் மட்டுமல்ல
அவரது கருத்துக்களும் படம் நெடுகிலும் பேசப்படுவதற்கும்‪#‎ஜோக்கரை‬ பல முறை ரசிக்கலாம்...
ஒட்டு மொத்த மக்களுக்கு போராடுகிறவங்கள பார்த்து வெட்டியா கத்துறாங்க,
ரோட்ல டிராபிக் ஜாம் பண்றாங்க,
,ஜோக்கருங்க என நெனச்சவங்க பல பேர்கிட்ட
சின்ன மாற்றத்தனாலும் ஏற்படுத்தும் இந்த படம் ,
‪#‎வீதிக்கு_வா_தோழா_போராட‬

ஜோக்கர் ...


தம்பி முருகா, பரிதாபம் கொள்கிறேன்.
பிழைக்கும் வழியைப் பார்..
இந்த மானமற்ற கூட்டத்திற்காகவா படம் எடுக்கிறாய்..?
போ, கரம் மசாலா, கற்பழிப்பு, குத்துப்பாட்டு ,ஆத்தா சென்டிமென்ட் வைத்து படமெடு.
நீலாங்கரையில் வீடு வாங்கு..
ஆடி, ஆவணி கார் வாங்கு..
நல்லாயிரு ராசா...
வேணாம்யா, இந்த விளையாட்டு.
500 கொடுத்தால் கொலை செய்வான்.
1000 த்தை காட்டினால் தற்கொலை புரிவான்..
இந்த கேடு கெட்ட தமிழன்.
ஆனா ஒண்ணுய்யா.. தியேட்டர் காவலாளி வந்து "சார், படம் முடிஞ்சு போச்சு.. வெளியே வாங்க" ன்னாரு.
அந்த வெள்ளைத்திரையைப் பார்த்த பிறகுதான் நடக்க ஆரம்பித்தேன்.

கவிஞர் நா.முத்துக்குமார்


உலகின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்' நா.முத்துக்குமாரின் வரிகள்தான் இவை.
ஒரு கலைஞன் மறைந்தபின், அவன் அளித்த படைப்புகள் எல்லாமே அந்த மறைவை ஒட்டிய நினைவலைகளாகவே பார்க்கப்படும். இன்றைக்கு நம்மை விட்டுப்பிரிந்த நா.முத்துக்குமார் குறுகிய காலத்தில் புலிப்பாய்ச்சலாய் எண்ணற்ற படைப்புகள் அளித்தவர். வெறும் வார்த்தைத் தோரணங்களாக இல்லாமல், அர்த்தமுள்ள வரிகளாய் அவற்றை மாற்றியவர்.
"சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாளவில்லை... " என்பன போன்று தீவிர இலக்கியவாதிகளும் வியந்து பாராட்டும் உவமைகளை அளித்தவர். கவிஞனின் பயணம் கவிஞனின் வார்த்தைகளிலேயே... இங்கே...
தீயோடு தோன்றுக!
1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
ஆழம் அறி!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க... உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!
கோபம் கற்றுணர்!
பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.
உன் திசை உற்றுணர்!
காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.
அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன். கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.
எரிக்க எரிக்க எழுந்து வா!
இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
விகடன் பதிவிலிருந்து .....

Monday 15 August 2016

உலகையே புரட்டிப்போட்ட அறிக்கை....

வேர்களைத் தேடிய பயணம்!


சமத்துவம்தான் பெரியாரின் அடிப்படை நோக்கம் என்றால், அந்த வேலையைப் பார்க்காமல், ஏன் கடவுள் மறுப்புப் பரப்புரையில் அவர் இறங்கினார்? ஏன் மதங்களுக்கு எதிராக - குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக - காலம் முழுதும் எழுதியும், பேசியும் வந்தார்? இப்படித்தான் பலரும் கேட்கின்றனர்.
சாதி, மதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்ததுதான் அதற்கான காரணம். அதிலும் இந்து மதம் என்பது வருண-சாதி பிரிவுகளின் உற்பத்தித் தளமாக இருக்கின்றது. அதனால்தான் இந்து மதம் வேர் கொண்டுள்ள இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே ஜாதி உள்ளது.
வேறு மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கும் ஜாதிக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கத்தோலிக்கம், புராடஸ்டண்ட் ஆகிய பிரிவுகளும், சன்னி, ஷியா போன்ற பிரிவுகளும் இந்து மதத்தில் உள்ள சைவம், வைணவம் போன்றவை. பிறப்பால் தீர்மானிக்கப் படுபவை அல்ல. ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையிலானது.
'ஜா' என்றாலே பிறப்பு என்றுதான் பொருள். அதனால்தான், பத்மஜா (தாமரையில் பிறந்தவள்), வனஜா (வனத்தில் பிறந்தவள்) என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாற முடியும். சமயத்திலிருந்து அப்பர் சைவத்திற்கு மாறவில்லையா? ஆனால் அருந்ததியர் ஒருவர் முதலியாராகவோ, கோனாராகவோ மாற முடியுமா? அவர் மட்டுமின்றி, அவருடைய பரம்பரையில் கூட எவர் ஒருவரும் தன் ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது.
அவ்வாறு மாற்றிக் கொள்ளவே முடியாத ஒரு ஏற்றத் தாழ்விற்கு வழி வகுக்கும் வருண சாதிப் பிரிவுகளுக்கான வேர்கள் இந்துமத வேதத்திலேயே காணக் கிடக்கின்றன.
இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும்தான். சுருதி என்றால் தெய்வத்தால் அருளப்பட்டது, மனிதர்களால் கேட்கப் பட்டது என்று ஆகும். ஸ்மிருதி என்பவை நினைவில் கொள்ளத்தக்கவை அல்லது வழி வழியாக வந்தவை எனப் பொருள்படும். அவை மனிதர்களால் இயற்றப்பட்டவை.
வேதங்களும், உபநிடதங்களும் கடவுள் அருள் பெற்ற ரிஷிகளால் அருளப்பெற்ற ஸ்ருதிகள் என நம்பப்படுகின்றன. அவற்றுள் ரிக் வேதமே ஆதி வேதம். அந்த வேதத்தின் பத்தாவது இயலான புருஷ சூக்தம்தான் வருண வேறுபாட்டை 'எடுத்தருள்கிறது.' அந்த வருண அடிப்படையில், பிற்காலத்தில் ஒவ்வொரு வருணத்திற்குமான "தருமம்" கூறப்படுகிறது. இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் 'தருமம்' என்றால் அறம், நீதி என்றெல்லாம் பொருள் இல்லை. அவரவர் வருணத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதே அறம்.
சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட தருமம், "பலனை எதிர்பார்க்காமல் மற்ற வருணத்தாருக்கெல்லாம் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆக, , ஏற்றத் தாழ்வைப் பரம்பரை பரம்பரைக்கும் உறுதி செய்கிறது இந்து மதம். . பிறகு அதனை விட்டுவிட்டு ஜாதியை எப்படி எதிர்ப்பது. ஜாதியை எதிர்க்காமல் சமத்துவத்தை எப்படிப் பெறுவது? சமதத்துவம் இல்லாத இடத்தில் சுயமரியாதை எங்கிருந்து வரும்?
அதனால்தான் பெரியார் சொன்னார், "நான் ஜாதி என்கிற நச்சு மரத்தைப் போட்டுப் பொசுக்கத்தான் புறப்பட்டேன். உன் மதம் புனிதமானது என்றால், ஜாதியை விட்டு மதத்தைப் பிரித்து எடுத்துக் கொண்டு போ. முடியாது, இரண்டும் சேர்ந்தேதான் இருக்கும் என்றால் நான் அதனையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும். அப்படிச் செய்கிறபோது உன் கடவுள் உனக்குப் புனிதம் என்றால், இவைகளை விட்டுத் தனியாக எடுத்துக் கொண்டு போய்விடு. இல்லையில்லை, ஜாதி, மதம், வேதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறதென்றால், கடவுளையும் போட்டுப் பொசுக்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை".
பெரியாரின் கடவுள் மறுப்பு இதுதான்! இந்த நோக்கில்தான் 'கடவுளை மற, மனிதனை நினை' என்கிறது பெரியாரியம்
-
சுப வீரபாண்டியன் அவர்களின் சுயமரியாதை தொடரில் ஆறாம் பகுதி

நீங்கள் அவர்களை வெகுதூரத்தில் தேடாதீர்கள்

சமத்துவத்தையும்,சமூக நீதியையும் நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னே வைத்தால்,
உங்களை நான்கு அடி பின்னே இழுக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது,
நீங்கள் அவர்களை வெகுதூரத்தில் தேடாதீர்கள்,அவர்கள் உங்கள் அருகாமையில் உங்கள் தோழன் போல் உங்கள் தோள்களில் கைபோட்டு பார்ப்பனியத்தின்‬ ஏவுகணையாக நின்றுக்கொண்டிருப்பார்.அவர்களின்
இரு கேள்விகள் இப்படியாக இருக்கும்.
1, இட ஒதுக்கீட்டால் நாங்கள் திறமையிருந்தும் பாதிக்கப்படுகிறோம்,
2,இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள்,எல்லோரும் ஒற்றுமையாய்தானே இருக்கிறோம்.


எச்சரிக்கை‬,

இவர்களிடம் வைகோவை காணும் விஜயகாந்தை போல ஒதுங்கி இருங்கள்.

இன்னமும் இந்தியாவாக இருப்பதே சாதனை தான்...!!!

அறுபது ஆண்டுகளை கடந்துவிட்ட சுதந்திர இந்தியாவின் சாதனை என்ன...? அது
இன்னமும் இந்தியாவாக இருப்பதே சாதனை தான்.
சுதந்திரம் வழங்கிய வெள்ளையர்கள் கூட இந்தியா விரைவில் உடைந்து போய்விடும் என்று தான் நினைத்தார்கள். ஏனெனில், உண்மையிலேயே இந்தியா ஒரு நாடாக இருக்க எந்த தகுதியுமே இல்லாதது. அதையும் மீறி இன்று நாடாக இருக்க காரணம் இந்தியர்கள் மனதில் உள்ள போலியான தேசப்பற்று தான்.
இந்தியா அளவிற்கே உள்ள ஆனால் இந்தியாவை விடவும் வரலாறு குறைவான ஐரோப்பா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது? ஆனால் இந்தியா மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது சில நூற்றாண்டுகள் பின் தங்கி இருப்பது ஏன்?
நூறு கோடியை தாண்டிய மக்கள் தொகை இருந்தும் கூட ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டியில் சில தங்கப்பதங்களை கூட இந்தியர்களால் வெல்ல முடிவதில்லையே ஏன்?
உலக அளவில் ஏதேனும் சாதித்த ஒன்றிரண்டு இந்திய சாதனையாளர்கள் கூட இந்தியாவை விட்டு வெளியேறிய பின்பே அதை சாதிக்க முடிந்ததே ஏன்?
உண்மையில் இந்தியாவின் பிரச்சனை தான் என்ன?
இந்தியாவின் பிரச்சனையே அது ஒரே நாடாக இருப்பது தான், ஒரே நாடாக இருப்பதன் காரணத்தில் ஒவ்வொரு இந்தியனும் சக இந்தியனால் மொழி, மதம், இனம், ஜாதி என பலவித ஆதிக்கத்திற்கு ஆளாகிறான். ஒவ்வொரு மாநில மக்களும் சக மாநிலத்தவர் மீது எந்நேரமும் ஏதேனும் ஒரு வித ஆதிக்கம் செலுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
அதன் காரணத்தினால் இருவரின் சுதந்திரமும் பறிபோய் இருவருமே அறிவை முன்னேறவேண்டிய வழியில் செலவிடாமல் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுத்துகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள இன மக்களில் சிலர் ஆதிக்க மனப்பான்மையும் சிலர் அடிமை மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பதால், இந்தியா என்பதை கருவியாக பயன்படுத்தி ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் எல்லா வித அதிகார மையங்களையும் கைப்பற்றிவிடுவதுடன், பொருளாதாரத்திற்கான வழிகளையும் தங்கள் வசப்படுத்தி விடுகின்றனர்.
மேலும், எங்கும் எதிலும் தாங்கள் மட்டுமே முண்ணனியில் இருக்க வேண்டும் எனும் ஆதிக்க வெறியுடன் மற்றவர்களை ஒடுக்குகின்றனர். ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மற்ற மொழி இன மக்களுக்கிடையே செயற்கையாக பிரச்சனைகளை தோற்றுவித்து அவைகள் எப்போதும் தொடரும்படி பார்த்துக்கொள்கின்றனர்.
சுருக்கமாக சொன்னால் முன்னேற விரும்பும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் எந்நேரமும், ஜாதி மதம் மொழி இனம் என பல வித ஆதிக்கம் கொண்ட மக்களை தூங்கி சுமக்கின்றனர். யார் யாருக்காகவோ யார் யாரோ உழைக்கிறார்கள். எந்நேரமும் ஒருவரை ஒருவர் சுரண்டுகிறார்கள். அந்த சுரண்டலுக்கு இந்தியா எனும் கட்டமைப்பு பாதுகாப்பாக இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவின் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக உருவாகி மற்ற மாநிலங்களின் ஆதிக்கமின்றி தன்னுடைய கலாச்சார பண்பாடுடன் சுயமாக இயங்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் இந்தியா உடைந்தால் மட்டுமே இந்திய வளர்ச்சி சாத்தியம். இந்தியா உடைவது இந்தியர்கள் அனைவருக்குமே நல்லது. இந்தியா இந்தியாவாக இருக்கும் வரை வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை.
இந்தியா எனும் கட்டமைப்பு சுரண்டி கொழுக்கும் முதலாளிகளுக்கும் இன, மொழி, மற்றும் மத வெறி கொண்ட, மலையாளிகள் மற்றும் பார்ப்பன பாசிச வெறி பிடித்த ஆரியர்களுக்குமே பயனுள்ளதாக இருக்கும்.
மற்ற இன, மொழி யை சார்ந்த மக்கள் எவ்வளவு தான் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களால் இந்தியாவில் வளரவே முடியாது என்பதே உண்மை.
மேலும், தேசிய மொழி என ஒன்று இல்லாதவரை இந்தியா எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடிய அபாயம் இருப்பதாலேயே தேசிய மொழியை திணிக்க முயல்கிறார்கள். மேலும், இந்திய தேசியத்தை எப்போதுமே தமிழகம் கேள்விக்குள்ளாக்கியே வருவதாலேயே தமிழகத்தையும் தொடர்ந்து ஒடுக்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு இந்தியாவை உடைப்பதே. இந்தியா உடைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியர்கள் அனைவரிடமும் பரப்புரை செய்து வன்முறையின்றி பிரிவினைக்கு வழிவகுக்க இந்த சுதந்திர நாளிலேனும் முடிவேற்போம். நாமும் ஐரோப்பாவிற்கு இணையாக வளர்ச்சியடைவோம்.

ஆகஸ்டு 14 – வகுப்புரிமை நாள்


இந்த நாளில், 1950-ல், தந்தை பெரியார், தமிழக மக்களைத் திரட்டி, ”வகுப்புரிமை நாள்” என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழகத்தில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி உரிமை” இட ஒதுக்கீடு, 1950-ல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக “வகுப்புவாரி உரிமை ஆணை” இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்திய வரலாற்றில், தமிழகத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் தான், அனைத்து பிரிவு மக்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் சேர்த்து, நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு 1928 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950-ல் நடைமுறைக்கு வந்ததும், மோசடிப் பார்ப்பனர்கள், அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி, வகுப்புவாரி உரிமைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், வகுப்புவாரி உரிமை ஆணையை ரத்து செய்தது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற முதல் அடி இது தான்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தந்தை பெரியார் கண்டனம் செய்ததோடு நில்லாமல், மக்களைத் திரட்டினார். அனைத்து மக்களும், 1950-ல் ஆகஸ்டு 14-ஆம் நாளை “வகுப்புரிமை நாளாக” அறிவித்து போராட அழைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலகர்கள், என அனைத்து மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
போராட்டத்தின் வலிமையை உணர்ந்த மத்திய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் பாபாசாகிப் அம்பேத்கரும், இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், வகுப்புரிமையை நிலை நாட்டவும், அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15 (4) உருவாக்கப்பட்டது. இந்த விதியில் தான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர்க்கு, நாடு முழுவதும், கல்வியில் இட ஒதுக்கீடு மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு அளிக்கின்றன.
1950-ல் அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் பிரிவான 16(4) மட்டும்தான் இருந்தது. கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு இல்லை.
சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியாரின் வகுப்புரிமைக்கான போராட்டத்தின் காரணமாகத்தான், கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு சேர்த்திட வாய்ப்பு கிட்டியது. இது தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்திட்டது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோரும் உறுதுணையாக இருந்தார்கள்.
ஆகஸ்டு 14, 1950-ல் பெரியார் நடத்திய வகுப்புரிமை நாள் போராட்டத்தையும், அதன் விளைவாக, இன்றளவும், கல்வியில் இட ஒதுக்கீடு பெறும் இளைய சமுதாயம், இந்த வரலாற்றையும், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும் இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

தேச பக்தியும் கோட்சே புத்தியும்...


மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?

இந்தியப் பொதுவுடைமை இயக்கம்
வலது, இடது வரலாறு: மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் என்றால் எப்படியும் பேசுவார்கள், கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனதுதான். ஆனால், “அட இப்படியும் பேச முடியுமா” என்று ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார், சீனிவாசன்.
இவர் நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார். ”ஒரு மூத்த கம்யூனிஸ்ட்” தலைவர் திடீரென்று, அக்கட்சியின் பரம எதிரியும், இந்து மதவெறி பாசிசக் கட்சியுமான பாரதீய ஜனதாவுக்கு எப்படி மாறினார்? ஏதாவது ஒரு முற்போக்கு சாயலுடைய கட்சிக்குத் தாவினால் கூட கொஞ்சமாவது நியாயமிருக்கும்.
சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.
சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.
”முன்புகூட சில சி.பி.ஐ. பிரமுகர்கள், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் மோகன் குமாரமங்கலம், நந்தினி சத்பதி, கே.ஆர். கணேஷ் போன்ற சில தலைவர்கள் காங்கிரசு – இந்திரா மூலமாக சோசலிசத்துக்குப் பாதை போடுவதாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், இப்படியா!” திகைத்து நிற்கிறார்கள், அக்கட்சியில் சிலர்.
”பிழைப்புவாதம் எந்த வயதிலும் வரலாம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சமாதானம் கூறுகிறார், கட்சியின் இளைய – புதிய தலைவர் மகேந்திரன்.
ஆனால், கட்சி மாறிய சீனிவாசன், தனது செயலுக்குச் சித்தாந்தபூர்வமான நியாயம் சொல்லுகிறார். ”மார்க்சியத்தின் மறுவடிவம் பா.ஜ.க.”
”அது எப்படி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகிறாரே” என்று நீங்கள் வியக்கலாம்.
”முடியும்” என்று சாதிக்கிறார். ”சிகப்பு வெளுத்தால் காவி” என்று கூடச் சொல்லவில்லை. “காவியும் ஒரு சிகப்பு வண்ணம்தான் – சாயல்தான் வேறு” என்று ”நிகழ்” காலத்துக்கு ஏற்ற ‘நிறப்பிரிகை”த் தத்துவம் பேசுகிறார்.
”இந்திய மண்ணில், இந்தியக் கலாச்சார மரபில், இந்தியத் தத்துவஞானத்தில் வேர்விட்டு, மார்க்சியத்தின் சிந்தனை வழியில் நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியின் அமைப்பு விதியிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. வேதங்களையோ, உபநிஷத்துக்களையோ, இதிகாசங்களையோ, புராணங்களையோ, மகாபாரதத்தையோ, இராமாயணத்தையோ பற்றிக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எப்படிச் சிறந்த கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார், சீனிவாசன்.
மேலும், ”மார்க்சியம் என்பது விஞ்ஞானம். இதை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்த இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டார்கள். காங்கிரசு, திராவிட இயக்கங்கள் போன்றவற்றின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன. மார்க்சிய சிந்தனைகளை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடிய கட்சி பா.ஜ.க. என்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன்.”
1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
“இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் இவற்றில் நாம் வேரூன்றி நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வாதம். இது மார்க்சியத்தின் மறுவடிவம்தான்.” என்றும் கூறுகிறார்.
“ஒரு கம்யூனிசத் துரோகி கண்டதையும் பேசுவான். அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கொள்ளத் தேவையில்லை” என்று வெகு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியும். இது ரொம்ப எளிமையான கணக்கு! பாரதீய ஜனதாவோ இந்து வெறி பாசிச – பார்ப்பன சனாதனக் கட்சி, அதில் போய் சேருகிறவன் வேறு எப்படி இருப்பான், எதிரியின் அணியில் சேருபவன் வேறென்ன பேசுவான் என்பதுதான் அந்தக் கணக்கு.
சீனிவாசன் எதிரி முகாமுக்குப் போய் விட்டதாலேயே அவர் சொன்ன கருத்துப் பற்றிக் கணக்குப் போடுவது பலருக்கு எளிதாகப் போய்விட்டது. பா.ஜ.க.வின் எதிரி முகாமாகிய ”நம்மிடையே” இருக்கும் இவர்களுடைய கருத்துக்களையும் பற்றிக் கணக்குப் போடுவது அதே பலருக்கு சிக்கலாக உள்ளது. பல சமயம் தவறாகவும் போய் விடுகிறது.
பா.ஜ.க.வையும் மார்க்சியத்தையும் இணைப்பதற்கு சீனிவாசன் பயன்படுத்தியிருக்கும் சங்கிலி, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்.” முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியாக அவர் இந்து மத வெறி பாசிச – பார்ப்பன சனாதனத்தை மார்க்சியத்திற்குள் புதைத்து மோசடி செய்ய முயலுகின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவிர, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசுவோர் பட்டியலில் சமீபத்திய அவதாரம்தான் இந்தத் துரோகி என்பது மற்றொரு உண்மை.
“இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இதுவரை மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்பது சீனிவாசனின் குற்றச்சாட்டு, ”பா.ஜ.க.தான் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றும் சரியான கட்சி” என்பது, அவர் எடுத்திருக்கும் முடிவு.
சீனிவாசனின் முடிவில் மாறுபட்டாலும் அவரது குற்றச்சாட்டில் முற்றாக உடன்படுபவர்கள் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளும், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், தலித்தியம், தமிழினம், திராவிடம், சமூகநீதி எனப் பல்வேறு பிரிவுகளாக உள்ளவர்கள் வெளியேயும் ஏராளம்.
உள்ளே இருப்பவர்கள் வெளியே போகும்போதெல்லாம், வெளியே இருப்பவர்களின் நிலைப்பாடுகளை பொதுவுடைமை இயக்கத்தவர்கள் விமர்சிக்கும் போதெல்லாம், ஏதோ முற்றிலும் புதிதாகச் சொல்லுவதைப் போல முன்வைக்கப்படுவதுதான் ”மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை” என்கிற வாய்ப்பாடு.
இவர்கள் அனைவரும் இரண்டு உண்மைகளை மறந்து விடுகின்றனர்.
முதலாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு எண்பது ஆண்டு கால வரலாறு உள்ளதென்றால், இந்த “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்கிற வாய்ப்பாட்டுக்கும் எண்பது ஆண்டுகால வரலாறு உண்டு.
இரண்டாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் இந்த எண்பதாண்டு கால வரலாற்றில், ஒரு சில குறிப்பிட்ட, குறுகிய காலங்கள் தவிர இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தியதே ”மரபு வழி மார்க்சியம்” அல்ல; ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” தான். ஆனாலும், ”இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வகுத்து வழி நடத்தவில்லை. அது வரட்டுத்தனமாக மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றித்தான் பரிதாபகரமாகத் தோற்றுப் போய்விட்டது” என்று விமர்சிக்கப்படுகிறது.
பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார்
பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார்
இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” ”மரபு வழி மார்க்சியம்” என்கிற சொற்றொடர்களுக்கு ஒரே பொருள் விளக்கம் தருவதில்லை. அவரவர் நிலையில் நின்று பலவாறாக விளக்கங்களும் விமர்சனங்களும் தருகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய ஆன்மீகம், அகிம்சையை, ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் காந்தியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று சிலர் சொல்லுகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய தேசிய இனப்பிரச்சினை, சாதிய முறை போன்றவற்றை ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
இவ்விரு பிரிவினரின் கருத்துப்படி இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர்களும், அதன்பின் தலைமையேற்றவர்களும் ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியத்தை அப்படியே பின்பற்றினார்கள் என்றாகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர்கள் என்று ”அறியப்படும் அனைவரும்” மரபுவழி மார்க்சியத்தை ஆரம்ப முதலே ஏற்க மறுத்தவர்கள். உலகப் பொதுவுடைமைக் கட்சிகள் எல்லாம் இணைந்திருந்த மூன்றாவது அகிலம், அதன் மூலமாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் வழிகாட்டுதலை நிராகரித்தவர்கள்தான் அவர்கள்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறு, இங்குள்ள தேசிய முதலாளிகள் முற்போக்கானவர்கள். மூன்றாவது அகிலத்தைச் சேர்ந்த போல்ஷவிக் (ரஷ்யப் பொது வுடைமைக் கட்சி) ஏஜெண்டுகளின் மரபுவழி மார்க்சியம் இதைக் கணக்கில் கொள்ளவில்லை. இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குப் பிரிவினருடன் ஐக்கியப்பட்டு, விடுதலையையும் சோசலிசத்தையும் சாதிப்பதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று சொல்லி, அந்த திசையிலே தான் பொதுவுடைமை இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள்.
”தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்று மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் பல பிரிவு வாதாடிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர், சென்னை சிங்காரவேலர். அதுவும் 1923-லேயே, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மண்ணில் – மே நாள் கொண்டாடியவர்; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதுடன் அதில் நிறுவப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிங்காரவேலர்.
இந்தச் சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர். இவர் தனித்தன்மை வாய்ந்த, புரட்சியைச் சாதிக்கவல்ல, இரகசிய – சட்டவிரோத, ஆயுத பாணியாக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் ஒரு போதும் உடன்பாடு கொள்ளவில்லை.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் முன்பகுதி, காந்தியின் தலைமையிலான காங்கிரசுக்குள் பொதுவுடைமை இயக்க அமைப்புக்களை நிறுவி, விடுதலையையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அமைந்தது. அப்போது வன்முறை தவிர்த்த மார்க்சியமே காந்தியம்; புத்தரும் பொதுவுடைமையும், காந்தியமும் ஒன்றே; வழிமுறை மட்டுமே வேறானது. புத்தரின் வாரிசாகவே காந்தியம் அமைந்துள்ளது; புத்தரும் காந்தியும் போதிக்கும் அகிம்சை புரட்சியே சரியானது – இவைதான் சிங்கார வேலரின் ஆரம்பகாலப் பொதுவுடைமைக் கண்ணோட்டம்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார்.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி, பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்துக்குள்ளேயே பொதுவுடைமை கட்சியைக் கட்டி விடுதலையையும் சமதருமத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டது. இதற்காக சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை சமதருமக் கட்சியை நிறுவினார். இந்தக் காலத்தில் சிங்காரவேலர் கொண்டிருந்த பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் காந்தியம் கைவிடப்பட்டிருந்தது; இருந்தாலும் அகிம்சை முறையில் விடுதலை – பொதுவுடைமையைச் சாதிக்கும் நோக்கம் நீடித்தது. சாதி – மத எதிர்ப்பு போன்ற சுயமரியாதைக் கூறுகளும் சேர்க்கப்பட்டிருந்தன.
சிங்காரவேலர் காங்கிரசில் இருந்த போது அதற்குள்ளாகவே, பொதுவுடைமை காணும் நோக்கோடு ”இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பை நிறுவினார். பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுமாறு கம்யூனிச அகிலம் கோரியபோது அதற்குப் பதிலாக “இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி” (தொழிலாளர் விவசாயக் கட்சி)யை நிறுவினார். 1925, கான்பூரில் பொதுவுடைமையாளர்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்று, கட்சிக்கும் தலைவராவதற்கு முன்பு, தொழிலாளர் அரசியல் கட்சியை நிறுவினார். அது பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைப் போன்று இயங்கும், (ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பிரதமரான) இராம்சே மாக்டனால்டு போன்றோரின் கருத்துக்களை வழிகாட்டும் தத்துவமாக ஏற்கும் என்றார்.
காங்கிரசில் இருந்து கொண்டு அதன் மூலம் பொதுவுடைமை இயக்கத்தையும் கட்டும் சிங்காரவேலரின் முயற்சி, பொதுவுடைமை கொள்கையில் உடன்பாடு கொண்ட தொழிலாளர் தலைவர்கள் என்று திராவிட – தமிழினவாதிகளால் போற்றப்படும் திரு.வி.க., சக்கரை (செட்டியார்) பூரீராமுலு போன்றவர்களாலேயே முறியடிக்கப்பட்டது. அதுவும் கண்ணியமான முறையில் இல்லை. தொழிலாளர் போராட்டத்துக்காக காங்கிரசு கொடுத்த நிதியை சிங்காரவேலர் கையாடல் செய்தார், பதவிக்காக முறைகேடாக முயன்றார், கான்பூர் சதி வழக்கில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார் என்கிற அவதூறு செய்து ஒதுக்கப்பட்டார்.
சிங்காரவேலரால் தலைமையேற்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள், அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரசின் தலைவர்களான வி.வி. கிரி, என்.எம். ஜோஷி ஆகியோரின் துரோகத்தால் தோல்வியடைந்தன. இதனால் வெறுப்புற்ற சிங்காரவேலர், அப்போது தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்த பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆனால், 1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இத்தோடு சிங்காரவேலரின் பொதுவுடைமை இயக்க முயற்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்தன.
ஏறக்குறைய 15 ஆண்டுகள் தனது ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” அடிப்படையில் தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவி, வளர்க்க சிங்காரவேலர் முயன்றார். அதே காலகட்டத்தில் மேற்கு இந்தியாவில் டாங்கேயும் அவரது சீடரும், காந்தி ஆசிரமவாசியுமான சத்திய பக்தாவும் அதே முயற்சியை மேற்கொண்டனர்; வட இந்தியாவில் மணிலால் என்பவர் அதே முயற்சியில் இருந்தார். 1922 டிசம்பரில், கயாவில் கூடிய இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டையொட்டி சிங்காரவேலர், டாங்கே, மணிலால் மூவரும் சந்தித்து ஒருங்கிணைப்புக்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வங்காளத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்காரோடு நான்கு மையங்களில் இருந்து நான்கு அறிக்கைகளை முன்வைத்து காங்கிரகக்குள்ளாகவே நான்கு ”பொதுவுடைமை” அமைப்புகளைத் தனித்தனியே அமைத்தனர்.
முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பது, சட்டபூர்வ – வெளிப்படையான அமைப்பாக மட்டுமே செயல்படுவது, கம்யூனிச அகிலத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது என்பதே அன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் பிரதான பெரும்பான்மை நிலையாக இருந்தது. தெற்கே சிங்காரவேலரும் வடக்கே டாங்கேயும் இந்த நிலையின் பிதாமகர்களாக இருந்தனர்.
1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.
ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்
ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்
இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.
வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.
ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.
காங்கிரசு – காந்திய வழியில் தமது ஆசிரம அரசியலைத் தொடங்கிய ஜீவா, 1932-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில் பகத்சிங்கின் கட்சித் தோழர்களிடம் போதனை பெற்று கம்யூனிச அரசியலை ஏற்றார். வெளியில் வந்ததும் பெரியார், சிங்காரவேலருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து ஒரு நாத்திக மாநாடும், பிறகு ஒரு ஜமீன்தாரல்லாத மாநாடும் நடத்தினார். பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் எனத் திராவிட – தமிழினவாதிகளால் இன்றும் போற்றப்படும் பெருவியாபாரிகள் முதலாளிகள், நிலக்கிழார்களின் நிர்ப்பந்தம், அரசின் மிரட்டல் காரணமாக ”கொள்கையைவிட அமைப்பைப் பாதுகாப்பதே முக்கியமானது” என்று சொல்லி சுயமரியாதைத் திட்டதையும் பெரியார் கைவிட்டார்.
இதனால் வெறுப்புற்ற ஜீவா, ”சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்று கூறி வெளியேறி, சிங்காரவேலரைத் தொடர்ந்து சுயமரியாதை சமதருமக்கட்சிக்குத் தலைமையேற்று பிரச்சாரமும், மாநாடும் நடத்தினார். அதற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த டாங்கே சிறப்புரையாற்றினார். அவரது ஆலோசனைப்படி சுயமரியாதை – சமதருமக் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசு மகாசபையிலும், காங்கிரசு சோசலிசக் கட்சியிலும் இணைந்தனர். 1936-இல் சேலத்தில் மாநாடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசு சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவா ஆனார்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார். அவர்கள் உருவாக்கி இருந்த “யங் கம்யூனிஸ்டு லீக்” என்ற இளைஞர் பொதுவுடைமை அமைப்பு ஆங்கிலேயக் காலனி அரசால் தடை செய்யப்பட்ட போது, அவர்களும் காங்கிரசு சோசலிசக் கட்சியில் இணைந்தனர்.
அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் - புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள்.
அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள்.
இக்கட்சியை வலுவாகக்கட்டி, பல தொழிலாளர் அமைப்புக்களை நிறுவி, பொருளாதார போராட்டங்களை நடத்திய போது, இக்கட்சியின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரசு முதல் மந்திரி இராஜாஜியும், தொழில் மந்திரி வி.வி. கிரியுமே அவற்றை ஒடுக்கினர். இருந்தாலும் காங்கிரசுக்குள் செயல்பட்டு அதன் அமைப்புப் பதவிகளைப் பிடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டனர் ஜீவா போன்றவர்கள். இராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோரோடு போட்டியிட்ட ஜீவா அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுரா காங்கிரசில் சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் காந்தி-நேரு குழுக்களுக்கிடையே தலைமைக்காக நடந்த மோதலின் போது ஒற்றுமையை உருவாக்கவே டாங்கே, ஜீவா போன்றவர்கள் முயன்றனர். காந்தி கும்பல் அம்மாநாட்டில் தோற்றபோதும், நிர்ப்பந்தம் – மிரட்டல் மூலமாக சுபாஷ் சந்திரபோசை விரட்டி விட்டு தலைமையைக் கைப்பற்றியது. அதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் எனக் கருதப்பட்ட அனைவரையும் காங்கிரசு சோசலிசக் கட்சியிலிருந்து விரட்டும் வேலையை அது மேற்கொண்டது.
இப்படி வெளியேற்றப்பட்டவர்கள் ஜோஷி தலைமையில் தனிக் கட்சியாக அமைந்தனர். அதற்கு இங்கே ஜீவா, இராமமூர்த்தி போன்றோர் தலைமையேற்றனர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் காங்கிரசின் நிலைப்பாடு எடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஷி – டாங்கே போன்ற கம்யூனிஸ்டுகள். சோவியத் ஒன்றியத்தை இட்லரின் ஜெர்மனி தாக்கிய போது கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏகாதிபத்தியப்போரை எதிர்த்துப் புரட்சியைத் தொடுப்பதற்குப் பதில், சோசலிச அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆங்கில ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்தனர். இதனால் தடை நீக்கப்பட்டு வெளியே வந்தார்கள்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் நாடு முழுவதும் காந்திய காங்கிரசு வழிமுறைகளை நிராகரித்து, உடனடி விடுதலை கோரி, தொழிலாளர்கள், படைவீரர்களின் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வெடித்தன. இதன்பின்னணியில் கம்யூனிஸ்டுகளின் சதி இருப்பதாகக் கருதிய காங்கிரசு அமைச்சரவை பொதுவுடைமை இயக்கத்தைத் தடை செய்து அதன் அணிகளை வேட்டையாடியது. ஆனால் அதன் தலைவர்களோ, புரட்சிக்கு அவசியமான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியையும், இரகசியக் கட்சி அமைப்புகளையும் நிறுவுவதற்குப் பதிலாக, காங்கிரசு, திராவிடர் கழகப் பிரமுகர்களின் ஆதரவுடன் வெறுமனே தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். ஆந்திராவின் தெலுங்கானாவில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1947 அதிகாரமாற்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆயதந் தாங்கிய உழவர் பேரெழுச்சியாக வளர்த்தெடுத்தனர். அதேசமயம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ரணதிவே நாட்டின் நிலைமையை மிகை மதிப்பீடு செய்து ரஷ்யப் புரட்சியை அப்படியே காப்பியடித்து, உடனடியாகவே நாடு தழுவிய முறையில் ஆயுதப் பேரெழுச்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிகாட்டுதலைக் கொடுத்தார். இந்த “அதீதப் புரட்சி” காரணமாக கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்ததோடு, டாங்கே, மோகன் குமாரமங்கலம், அஜாய் கோஷ் போன்ற துரோகிகளின் சரணடைவுக்குப் பிறகு தடைநீங்கி, இ.பொ.க. சட்டபூர்வக் கட்சியானது.
அதன்பிறகு, நாடாளுமன்ற சகதிக்குள் மூழ்கிக் கொண்டே, எந்தப்பாதையில் நகர்வது என்று குழம்பிக்கிடந்த போது, பொதுவுடைமைத் தலைவர்களுக்கு குருச்சேவின் வருகை பேருதவியாக அமைந்தது. அவர்கள் இந்திய – சீனப்போரைக் காரணமாக வைத்து ”கம்யூனிசக் கட்சி”. “மார்க்சிசக் கட்சி’ என்று இரண்டு பிரிவுகளாக இயங்கினாலும் அவர்களிடையே அடிப்படைத் திட்டத்தில் ஒரே ஒரு வேறுபாடுதான் இருந்தது.
1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது.
1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது.
காங்கிரசு, பிற்போக்குப் பெருமுதலாளிகளின் கட்சி அதனுடன் அணிசேரக் கூடாது என்பது ”மார்ச்சிஸ்ட் கட்சி”யின் நிலையாகவும், காங்கிரசு முற்போக்குத் தேசிய முதலாளிகளின் கட்சி, அதனுடன் அணிசேர்ந்தே ஆகவேண்டும் என்பது ”கம்யூனிசக் கட்சி’யின்” நிலையாகவும் இருந்தது. இந்த இருகட்சிகளுமே காங்கிரசு பற்றிய தத்தமது நிலையை தேர்தல் அரசியலுக்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதால் இதுவொன்றும் அடிப்படையான வேறுபாடு அல்ல. 1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது. 1977 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, சி.பி.ஐ. காங்கிரசுக்கு எதிராகப்போய் சி.பி.எம்.மின் நிலை எடுத்தது. இப்போது காங்கிரசுக்கு ஆதரவு என்ற சி.பி.ஐ.யின் முன்னாள் நிலையை இரண்டு கட்சிகளுமே எடுத்துள்ளன.
தமிழகத்தில், சிங்காரவேலருக்குப் பிறகு, டாங்கேயின் வழியில் ஜீவா, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் போன்றவர்கள் ஒரு பிரிவை வழி நடத்தினார்கள். நம்பூதிரிபாடு வழியில் ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியம், நல்லசிவம், சங்கரய்யா போன்றவர்கள் மற்றொரு பிரிவை வழிநடத்தினார்கள்.
இந்த இரண்டு பிரிவுகளுமே, ”மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றின, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை” என்று இந்த இரண்டு ”மார்க்சியங்களை”யும் அறியாதவர்கள்தான் சொல்ல முடியும். இவ்விருபிரிவினருமே மார்க்சிய – லெனினியப் புரட்சிவழியை நிராகரித்து, குருச்சேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ், டென்சியாபிங் வழிமுறைகளைப் பின் பற்றுபவர்களாகத்தான் உள்ளனர்.
தேர்தல் அரசியல்வாதிகளாகச் சீரழிந்துபோய்விட்டார்கள் என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள். இதைத்தான் ”இந்திய மரபு. இந்திய ஞான. இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றில் வேர் விட்டு பொதுவுடமை இயக்கத்தை வளர்க்க வேண்டும்” என்கிறார்கள்.
மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது.
மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ”மார்க்சிஸ்ட்கட்சி – சி.பி.எம்”காரர்கள் நம்பூதிரிபாடின் சனாதன வியாக்கியானங்களைப் பற்றி ஒழுகுகின்றனர். ஆனால் சிங்காரவேலர், ஜீவா வழிவந்த சி.பி.ஐ.காரர்கள் பாரதி, வள்ளுவம், கம்பராமாயணம் இவற்றில் எல்லாம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தேடி “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” உருவாக்கி, அந்த வகையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.
இவை ஒருபுறமிருக்கட்டும். மரபு வழி மார்க்சியமே மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தான் போதிக்கிறது. மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை. மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது. மார்க்சிய – லெனினிய இயக்கம் மட்டும்தான் இந்த வழியிலே முயற்சிக்கிறது. எனவேதான், அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பே கையிலெடுத்தது.
இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள் பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித் தீர்க்கும் “மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்” என்று அடாவடி பேசுகின்றனர்.
மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!
சாத்தன்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999

புதிய தலைமுறை தொடங்கியதே கருப்புப்பணம்...


நேற்று பாண்டே ,தினந்தந்தி பற்றி பார்த்தோம் தினந்தந்தி ஆளும்
கட்சியாக யாரிருந்தாலும் ஆதரிக்கும் தன்மை கொண்டது.
அதில் பார்ப்பன பாண்டே மட்டும்தான் ஊடக பயங்கரவாதி.
இந்துத்வா ஆதரவாளன்.
தினத்தந்தி தொடங்கியது தமிழர் நலன் திராவிட சிந்தனை
என்ற அடிப்படையில் என்றாலும்
பெரும் முதலாளிகளாக வளர்ந்த பிறகு ஆட்சியில் யார் இருந்தாலும் ஆதரிக்கும் பிழைப்புவாதத்திற்கு போய் 40ஆண்டுகளாகி விட்டது.
ஆனால், புதிய தலைமுறை தொடங்கியதே கருப்புப்பணம், கள்ளப்
பணம்,கொள்ளைப் பணத்தால்தான்.
கல்வி தனியார் மயமாக்கப்பட்டு அதில் வளர்ந்த ஒரு விசச்செடிதான்
SRM கல்வி நிறுவனம். அது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல
பாகங்களிலும் கல்லூரியைத் தொடங்கி வருகிறது.
கணக்குவழக்கில்லாத கொள்ளைப் பணத்தை காப்பதற்காக
தொடங்கப்பட்ட நிறுவனங்கள்தான் புதியதலைமுறை,புதுயுகம்,
புதிய தலைமுறை இதழ்கள்.
இதன் தலைவர்தான் கொள்ளைக்காரன் பச்சமுத்து என்கிற பாரி வேந்தன்.
புதிய தலைமுறை ஊடகங்களை இவனது மகன்தான் நிர்வாகித்து வருகிறான்.
கல்வி நிறுவனங்களை மேலும் வளர்க்கவும் சொத்துக்களை
பாதுகாக்கவும் ஒரு கட்சியை (IJK) தொடங்கினான் அதை தனது ஜாதி ஆதரவு கட்சியாக அடையாளப் படுத்தினான்.
ஒரு நாய்கூட சீண்டாத இந்த கட்சியை வலிந்து கொண்டு பிஜேபியை ஆதரித்தான். பிஜேபிக்கும் ஊடகபலம்
வேண்டுமென்பதால் பச்சமுத்துவை பயன்படுத்தி வருகிறார்கள்.
மோடி பிரதமராக அறிவிக்கப்பட்ட உடன் குஜராத்துக்கே சென்று ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தான்.
அப்போதும் தனது ஜாதிகட்சியை(IJK) பிஜேபியோடு சேர்க்கவில்லை,
காரணம் அதிமுக அடிமைகள் முட்டாள் ஜெயாவை பிரதம வேட்பளராக அறிவிக்க வேண்டுமென கூத்தடித்துக் கொண்டிருந்தார்
“தொண்டர்கள் ஆசைபடுகிறார்கள்”
என முட்டாள் ஜெயாவும் நம்பிக் கொண்டிருந்தார் ஒரு
6மாதத்தில் அந்த மாயை கலைந்ததும் அதுபற்றிப் பேசுவதை நிறுத்திக்
கொண்டார்.
அதனால் ஜெயாவின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என
அடக்கி வாசித்த பச்சமுத்து ஜெயா அடங்கியதும்,
வெளிப்படையாக பிஜேபியோடு பாமக,தேமுதிக,மதிமுக, ஐஜேகே போன்ற
பிழைப்புவாத நக்கிநாய்கள் கூட்டணி அமைத்தன.
மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து 2’மாபெரும்’கூட்டத்தைநடத்தினார் பச்சமுத்து.
பிரியாணி குவாட்டர், தலைக்கு 300 வைத்து தனது SRM கல்வி
வாகனங்களில் ஆட்களை வரவழைத்து ‘மாபெரும்’ கூட்டமாக நடத்திக் காட்டி மோடியின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த இரு கூட்டத்துக்கு ஏற்பாடு போக 2கூட்டத்துக்கும் தலா 50லட்சம்
‘நன்கொடை’ யாக தந்ததாக பிஜேபியினரே பெருமை பேசினர்.
இதனால் அதிகம் சொத்து சேர்த்தது லாபமடைந்தது
பச்சமுத்துவின் SRM நிறுவனங்கள்தான்,
எல்லாக்கட்சிக்கும் ஊடகம் இருந்த போதும் பிஜேபிக்கு ஊடகம் இல்லை.
ஆக, பிஜேபியின் அறிவிக்கப்படாத கட்சி ஊடகமாக ஓராண்டு பணியாற்றி மோடியை அதிகாரத்தில் உட்கார வைத்தது.
இப்போது புதியதலைமுறையின் 24மணிநேர வேலையே மோடிக்கு ஏற்படும் அவப்பெயர்களை செய்திகள், விவாதங்கள் மூலம் துடைத்து
வருவதுதான்.
ஆனால், அதை நடுநிலை வேசம் போட்டுக்கொண்டு
செய்வார்கள்.
அந்த நடுநிலை வேசம்கூட போடக்கூடாதென தாலிபிரச்சனையில்
புதியதலைமுறைக்கெதிராக போராட்டம், சில சல்லிப்பயலுகளை விட்டு
வெங்காய வெடியை போட்டப் பிறகும் இவர்களது பிஜேபி பக்தி
குறையவில்லை.
மேலும் இந்துமதத்தைக் கேவலப் படுத்தும் புதியதலைமுறையில் பிஜேபியினர்
யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர்
அதற்கு பிறகும் மானங்கெட்ட புதிய தலைமுறைக்கு ரோசம் வரவில்லையே.
பிஜேபியினருக்கு பதிலாக மோடி ஆதரவாளர், சமூக ஆர்வலர் என்ற
பெயரில் கண்டகண்ட சொறிநாய்களை எல்லாம்
தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தினர்.
மொத்தமாக சொல்லப்போனால் பிஜேபிக்கு
தமிழகத்தில் ஒரு அகண்ட அடித்தளத்தை உருவாக்கியது புதியதலைமுறை.
அதற்குப் பதிலாக தமிழ்நாட்டைப் மட்டும் SRM நிறுவனத்தால்
சுரண்டிக் கொழுத்த பச்சமுத்துக்கு
குஜராத்,பீகார்,உ.பி,மபி கர்நாடகா என இந்தியா முழுவதும் SRM
தொடங்க வேலைகள் நடந்து வருகின்றன.
அதற்குத்தான் இந்த மோடி ஜால்ரா.
இலங்கையில் SRM கல்வி நிறுவனங்களைத் தொடங்க பிஜேபி
பரிந்துரையில் ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடிக்கக்
தொடங்கினார்.
பிரபாகரனை தீவிரவாதி என்றார்
LTTEயை தீவிரவாத இயக்கம் என்றார்.
அந்த ஈனப் பொழப்புக்கு பரிசாக இலங்கையிலும் SRM
காலூன்றியது.
தமிழ்நாட்டிலிருக்கும் SRM, புதியதலைமுறை சொத்துக்களைப்
பாதுகாக்க திருடி ஜெயாவையும் எதிர்த்து ஒரு வார்த்தை
பேசமாட்டார்கள்
அதாவது மாநிலத்தில் திருடி ஜெயாவுக்கு ஜால்ரா,
மத்தியில் கொலைகாரன் மோடிக்கு ஜால்ரா.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாடு முழுவகும் எழுந்த காங்கிரஸ்
எதிர்ப்பலையை டிவி விவாதங்களின் மூலம் மோடி ஆதரவலையாக
தமிழகத்தில் மாற்றியதில் புதியதலைமுறை, தினத்தந்திக்கும் பெரும்
பங்குண்டு.
வானதி,தமிழிசை, H.ராஜா, ராமகோபாலன், இல.கணேசன், SV.சேகர்
மட்டுமல்ல,
கேடிராகவன்,நாறவாய் நாராயணா, தனியாருக்கு
பொறந்தஅருண் தேவ், காவி நித்யானந்தம், கூமுட்ட
ராமமூர்த்தி, சகுனி சேகர்,
அரவேக்காடு பானு கோம்ஸ், மந்துப்பய பத்ரி இன்னபிற ஆகாவழி
நாய்களை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப் படுத்திய மக்கள்
விரோதத் தொலைக்காட்சிதான் புதிய தொழில்முறை.
இவர்கள் செய்தி வழங்கும் முறை
விவாதிக்கும் முறையே தனித்தன்மையானது
நாடிநரம்பு,தசை எலும்பு மூளை ரத்தமெல்லாம் அடிமைத்தனம் ஊறிப்
போன எச்சிக்கல நாய்களால் மட்டுமே இப்படி விவாதம் நடத்த முடியும்.
டேய் புதியதலை முறை தினத்தந்தி நாய்களா!
தமிழ்நாட்டில் எத்தனைகட்சி எத்தனை பேராசிரியர்கள், எத்தனை
நிபுணர்கள், எத்தனை எழுத்தாளர்கள், எத்தனை சிறுபத்திரிக்கை
யாளர்கள்
எத்தனையெத்தனை அறிவு ஜீவிகள் இருக்கிறார்களெனத்
தெரியுமா?
எவ்வளவு வடிகட்டினாலும் 10000பேர் தேறுவார்கள், அவர்களை
அழைக்காமல் பிஜேபி,RSSநாய்களை மட்டும் அழைப்பது என்னாங்கடா
நியாயம்.
அதுவும் திமுக,விசி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒரு ஆளை பேசவைப்பதும்
பிஜேபி சார்பாக ஒரு ஆளை, ஜாதிசங்க கட்சி சார்பாக ஒரு ஆளையும்,
சமூக ஆர்வலர் பெயரில் என 4ல் 3இந்துத்வாவாதிகளை
சாமர்த்தியமாக திணிக்கும் இந்த மாமா வேலை புதிய தலைமுறையின்
தனி ஸ்பெசல்.
அதே போல் மக்கள் மேடை நிகழ்ச்சியில் மக்கள் கடுமையாக கேள்வி கேட்டதால்
இப்போது ஸ்டூடியோவிலே சில சென்னை மங்குனிகளை
கொலுபொம்மை போல உட்கார வைத்து மக்கள் மேடை நிகழ்ச்சியையும் கருக்கலைத்து விட்டார்கள்.
அதேபோல் விவாதத்திற்கான தலைப்பைத் தேர்தெடுப்பதில் தினத்தந்தி புதியதலைமுறையின் உத்தியே தனி.
மழைவெள்ளப் பாதிப்புக்குக் காரணம் ஜெயாதான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
ஆனால், இவர்களது தலைப்பென்ன தெரியுமா?
“மழை வெள்ள நிவாரணம் எதிர் கட்சிகள் செய்வதுஅரசியலா? அக்கறையா?”
மோடியின் வெளிநாட்டுப் பயணம்
பயனளிக்கிறதா? இல்லையா?
மழைவெள்ளத்துக்குக் காரணம்
ஆக்ரமிப்பா?..அதிக மழையா?
மாட்டிறைச்சிக்காக அடித்துக் கொல்லப்பட்ட போது
“நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதா? ”
என மொன்னையான தலைப்புகளை வைத்து மோடியையும்
ஜெயாவையும் காப்பாற்றுவதே இவர்களது வேலை.
அதே போல விவாதிக்கும் போது பிஜேபி RSSநாய்கள் குரைக்கும் போது அதிக நேரம் பேசவிடுவது,
அதற்கு தெளிவாக யாராவது பதிலளித்தால் குறுக்கிடுவது
அல்லது இடைவேளை விடுவது,
அல்லது பிஜேபியினரைக் கத்தவிடுவது இதுதான் இவர்களது வழக்கம்.
யாராவது ஜெயா, மோடியை விமர்சித்து பேசினால் இவர்களே
குறுக்கிட்டு நீங்கள் அவர்களோடு கூட்டணி வைத்த போது இது
தெரியலையா?
நீங்களும் ஆக்ரமிப்பில் ஈடுபட்டுள்ளீர்கள் என பெரிய தீமையையும்
சிறிய தீமையையும் சமமாக்க முயற்சிப்பார்கள்.
உதாரணத்துக்கு, அனைத்துக் கட்சியினரையும் அழைத்து வட்டமேஜை விவாதம் நடத்தினார்கள்
அந்த கள்ளாட்டத்தின் விதிமுறையை ஆரம்பத்திலே அறிவித்துவிட்டார்
நெறியாளர்
அதாவது “அரசியல் பேசக் கூடாது
தனிநபரை குற்றம் சொல்லக் கூடாது மீட்புப் பணியில் ஏற்பட்ட
அனுபவம், அடுத்து பாதிப்பு வராமலிருக்க அறிவுரை ஏதாவது
சொல்லுங்கள்” என நிபந்தனை வைத்தார்.
அதாவது ஜெயலலிதாவையோ,
மோடியின் வருகை பற்றியோ மாநகராட்சி நிர்வாகத்தையோ, அல்லக்கை அடிமை நாய்களான அதிமுக MLA,MPகளையோ பேசக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம்
இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு யாரையாவது ஊம்பிப் பொழைக்கலாம்
மானங்கெட்ட பயலுகளா.
அமெரிக்காவிலிருந்து ஆண்டிபட்டி வரை முதலாளிகளுக்குஆட்சியாளர்களுக்கு அனுசரித்துப் போவது நடப்பதுதான்.
ஆனால், அவர்கள் 70%சுதந்திரமாக பணி செய்வர்.
பிரிட்டனில்,பிரான்சில், அமெரிக்காவில் தலைவர்களை கேள்வி கேட்பது, விவாதிப்பதை பார்த்தாவது திருந்துங்கள்.
பக்கத்து மாநிலம் கேரளாவில் நியூஸ் சேனலை எப்படி நடத்துகிறார்கள்
என்பதை பார்த்து அவர்களது மூத்திரத்தை குடித்தாவது திருந்தப்
பாருங்கள்.
கேள்வி கேட்பது விமர்சிப்பது என்பது ஈட்டியாக பாய வேண்டும் உண்மையை
தயவு தாட்சணியமில்லாமல் இழுத்து வெளியே கொண்டுவர வேண்டும்
அதுதான் சுயமரியாதையுள்ள ஒரு பத்திரிக்கையாளனுக்கு அழகு.
வார்டு கவுன்சிலரின் கொள்ளையை, சொத்து விபரத்தைக்
கூட சொல்லப் பயப்படும் நாய்களுக்கு எதற்கு ஊடகம்?
அதிலும் அந்த விவாதம் நடத்தும் வேங்கட பிரகாஷ், ஜென்ராம், கார்த்திகைச் செல்வன் குணசேகரன், தியாகச் செம்மல் போன்ற தயிர்சாத கோஷ்டிக்கு ஈட்டி
குத்துவது மாதிரி கேள்வி கேட்க சுட்டுப் போட்டாலும் வராது.
உப்புசப்பில்லாத தயிர் சாதத்தை ஊட்டி விடுவதுபோல
மென்மையாக கேள்வி கேட்பார்கள்.
அதே போல இவர்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடியவர்களை மட்டும்
விவாதத்துக்கு அழைப்பது
விவாதம் தொடங்கும் முன்னரே ஜெயா,மோடியை திட்டிவிடாதீர்கள் எனக் கெஞ்சுவது மீறி விவாதத்தில்
பங்கெடுப்போர் உண்மையைச் சொல்ல வாய்திறந்தால்
இடைவேளை விட்டு அந்த நேரத்தில் “சார்சார் அதைப் பற்றிப் பேசாதீங்க ”
என விவாதம் சூடாவதை தணிப்பது என தரகர்களுக்குரிய எல்லா
தகுதியையும் வைத்துக் கொண்டு நெறியாளர் எனச்
சொல்லிக் கொள்வது உங்களுக்கே ஞாயமா
இருக்கா? அக்கினிக் குஞ்சுகளே.
மிடாஸ் ஆலையில் ஜெயாவின் பங்கென்ன?
TRபாலுவின் பீர் பாக்டரியில் கருணாநிதிக்கு பங்கிருக்கிறதா? என
ரோபோட்டை வைத்து சொல்ல விடலாமா?
த.கிருஷ்ணன், சங்கரராமனை கொன்றது யார்?
ஜெயா ,கருணாநிதி, சசிக்கலா, ஓபிஎஸ் இவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு மக்களை ‘ரௌத்திரம்
பழக’விடலாமே
மோடி, ஸ்மிருதி ராணியின் சர்டிபிகேட் உண்மைதான என விவாதம்
நடத்தலாமே வார்டு கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை வைத்திருக்கும்
வருமானத்துக்கு அதிகமான சொத்தை ஸ்டிங் ஆப்ரேசன் மூலம்
மக்களுக்கு அம்பலப் படுத்தலாமே.
SRMபச்சமுத்து என்கிற பாரி வேந்தர் ஏரிகளை ஆக்ரமித்து ஏரி வேந்தரான
கதை கல்வியைக் கடைச்சரக்காக்கி
கல்வித்தந்தை என்ற கழிசடை உருவான வரலாறை விவாதிக்கமுடியுமா? முடியாது.
நல்ல முதுகெலும்புள்ள சுயமரியாதையுள்ள மனிதாக
இருக்க வேண்டும்.
ரப்பரில் முதுகெலும்பையும்
பிளாஸ்டிக்கில் நாக்கையும் கொண்டவர்களை வைத்திருக்கும்
புதிய தலைமுறை,தினத்தந்திக்கும் அது புரியாது.

இதற்கு பெயர் சுதந்திரமா?

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே… மாணவர்களே…
நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு!
காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி! ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி! அது மட்டும் எதற்கு? பேசாமல் அமெரிக்க கொடியை ஏற்றி விடலாமே!
பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம்… ஆனால் நமக்கில்லை!
காசில்லாதவனுக்கு கல்வியில்லை! படித்தவனுக்கு வேலையில்லை! இருப்பவனுக்கோ அது உத்திரவாதமில்லை! ஆக மொத்தம் வாழ்வதற்கே வழியில்லை! இதற்கு பெயர் சுதந்திரமா?
மோடி, லேடி முதல் அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சி கேடிகளும் செய்வதெல்லாம் ஃபிராடுதனம், பித்தலாட்டத்தனம்… ஆனால் பேசுவது மட்டும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!
நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்பதற்கு பெயர் சுதந்திரமாம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!
மதக்கலவரங்களையும, சாதிக்கலவரங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பெயர் சகோதரத்துவமாம்! போங்கடா… நீங்களும் உங்க சுதந்திரமும்…
ஆக மொத்தத்தில் இது போலி சுதந்திரம். இதற்கு ஏன் கொண்டாட்டம்? உண்மையான சுதந்திரத்திற்கு தேவை மீண்டுமொரு விடுதலைப் போராட்டம்...

‪‪சுதந்திரம் என்றால் என்ன‬ ? குச்சி மிட்டாய்


ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம்.
1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் காந்தியாரின் கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களின் சுரண்டலுக்கு எவ்வித பாதகமும் வந்துவிடாதபடி தங்களைக் காக்க விரும்பினார்கள். அதனால் தங்களால் வளர்த்துக் கொண்டுவரப்பட்ட காங்கிரஸிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு (கவனிக்க ஆட்சியை மட்டும்) அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். அதனால் 47ல் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே விடுதலை அல்ல என்கிறோம்.
அன்று ஏகாதிபத்தியத்தின் தலைமை பாத்திரத்தை வகித்தது இங்கிலாந்து. இன்று அது அமெரிக்காவிடம். இந்தியா எனும் சுதந்திர நாடு தீட்டும் திட்டங்களின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன் மறைந்திருக்கிறது என்பது எந்த மறைவும் இன்றி வெளிப்படையாக தெரியும் இந்த நாட்களில் சுதந்திரம் என்று எதைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள்?
1931 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் காந்தியைச் சந்தித்து கூறுகிறார்,
எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்காரின் இந்த விமர்சனத்திற்கான உள்ளீடு 60 களிலும் மாறவில்லை என போட்டுடைக்கிறார் தந்தை பெரியார்,
ஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.
படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம் ……
……. வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இன்று திண்ணியங்களுக்கும், கயர்லாஞ்சிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களே, இன்றும் இந்த நிலை மாறிவிட்டது என நம்புகிறீர்களா? என்றால் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?
முக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தும், – தொலைதூர கிராமங்களை விடுங்கள் – பெரு நகரத்து மக்கள் கூட மின்வெட்டிலிருந்து தப்பித்துவிட முடியவில்லை. அதேநேரம் பன்னாட்டு, தரகு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போதே தடையற்ற மின்சாரம் தருகிறோம் என்று தண்டனிட்டு எழுதிக் கொடுக்கிறார்களே. இதன் பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் பொருள் சுதந்திரம் என்று எப்படி கூறுவீர்கள்?
தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு பேரணைகள் கட்டுகிறோம் என்றார்கள். பல பத்தாண்டுகள் கடந்தும் அந்த அணைகளுக்காக பெயர்க்கப் பட்டவர்கள், நிவாரணம் கோரி இன்றும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேக்கப்பட்ட நீரோ நீலத்தங்கமாய் பன்னாட்டு முதலாளிகளின் கைகளை அலங்கரிக்கிறது. இதன்பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதை சுதந்திரம் என்றா கருதுகிறீர்கள்?
வடகிழக்கு மாநிலங்களின் கனிமங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இராட்சச மண்வெட்டியால் சுரண்டப்பட காத்திருக்கிறது. தங்கள் வாழ்விடங்களின் கீழே கனிமங்களை அடைகாத்த மக்களோ அவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பசுமையாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களின் கண்களில் கரிப்பது நீங்கள் கொண்டாடும் சுதந்திரம் தான் என்பது புரிகிறதா உங்களுக்கு?
விவசாயிகளுக்கே தெரியாமல் வேளான் கழகங்கள் மூலம் மான்சாண்டோவின் மரபீணி விதைகளை விதைத்து மண்ணை மலடாக்கி அதில் விவசாயிகளின் கழுத்துக்கு கயிற்றை பயிர் செய்வது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான். தெரியுமா உங்களுக்கு? மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ உள்ளே தள்ளுவோம் என்று சட்டமியற்றி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் கைகள் தான். தெரியுமா உங்களுக்கு?
லட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இன்னமும் இழப்பீட்டுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். ஆனால் அவர்களைக் கொன்ற யூனியன் காரபைடு ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி தப்பிக்கைவைத்த அரசோ, இனி இது போன்ற விபத்துகளுக்கு(!) கொள்ளையடித்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாம், அரசே அவர்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே பிச்சையிடும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இதுதான் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பொருள் என்பது விளங்கவில்லையா உங்களுக்கு?
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அரசு பள்ளிகளுக்கு வானம் பார்த்த கூரைகளையும், உடைந்த கரும்பலகைகளையும் பரிசளித்திருக்கிறது அரசு. கல்விக்கான ஒதுக்கீடுகளை வெட்டி வெட்டி இராணுவத்தின் கொண்டைகளில் பூவாய் சூடியிருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
சோதனைக் கருவிகளின்றி அரசு மருத்துவமனைகளையே நோய்க்கு ஆளாக்கிவிட்டு மக்களின் கைகளில் காப்பீடு அட்டைகளைத் திணித்து அவர்களை தனியார் அட்டைகள் இரத்தம் உறிஞ்சியெடுக்க அனுமதித்திருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று?
மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டது குறித்து கிஞ்சிற்றும் கவலையுறாமல் அம்பானிகளின் சொத்துச் சண்டையை கரிசனையுடன் தீர்த்துவைத்ததே நாடாளுமன்றம். நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பெயரால் தான் இது செயல்படுத்தப்பட்டது என்பது தெரியாதா உங்களுக்கு?
டன் டன்னாய் அரசி, உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் ஏழைகளுக்கு அதனைத் தரமாட்டேன் என்று தெனாவட்டாய் கூறினாரே ப்ப்ப்ப்ப்ப்பிரதமர். அவருக்கு அந்த திமிரை கொடுத்தது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை ஏன் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை?
ஏதோ ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்கு அடிமைகளை கட்டிவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் நடனத்தை ரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது. கண்முன்னே எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் மறுகாலனியாக்கத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு நடனத்தை ரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறப்போகிறீர்களா?
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவும் இல்லை, இது உங்களை எழுப்பும் முயற்சியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என் முன்னே நின்று கொண்டிருக்கும் இந்த மூன்றரை வயது குழந்தைக்கு உங்களைப் போல் நடிக்கத் தெரியவில்லை. அந்தக் குழந்தையிடம் நான் கேட்கிறேன்.
சுதந்திரம் என்றால் என்ன?
ம்…ம்… குச்சி மிட்டாய