Monday 15 August 2016

இன்னமும் இந்தியாவாக இருப்பதே சாதனை தான்...!!!

அறுபது ஆண்டுகளை கடந்துவிட்ட சுதந்திர இந்தியாவின் சாதனை என்ன...? அது
இன்னமும் இந்தியாவாக இருப்பதே சாதனை தான்.
சுதந்திரம் வழங்கிய வெள்ளையர்கள் கூட இந்தியா விரைவில் உடைந்து போய்விடும் என்று தான் நினைத்தார்கள். ஏனெனில், உண்மையிலேயே இந்தியா ஒரு நாடாக இருக்க எந்த தகுதியுமே இல்லாதது. அதையும் மீறி இன்று நாடாக இருக்க காரணம் இந்தியர்கள் மனதில் உள்ள போலியான தேசப்பற்று தான்.
இந்தியா அளவிற்கே உள்ள ஆனால் இந்தியாவை விடவும் வரலாறு குறைவான ஐரோப்பா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது? ஆனால் இந்தியா மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது சில நூற்றாண்டுகள் பின் தங்கி இருப்பது ஏன்?
நூறு கோடியை தாண்டிய மக்கள் தொகை இருந்தும் கூட ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டியில் சில தங்கப்பதங்களை கூட இந்தியர்களால் வெல்ல முடிவதில்லையே ஏன்?
உலக அளவில் ஏதேனும் சாதித்த ஒன்றிரண்டு இந்திய சாதனையாளர்கள் கூட இந்தியாவை விட்டு வெளியேறிய பின்பே அதை சாதிக்க முடிந்ததே ஏன்?
உண்மையில் இந்தியாவின் பிரச்சனை தான் என்ன?
இந்தியாவின் பிரச்சனையே அது ஒரே நாடாக இருப்பது தான், ஒரே நாடாக இருப்பதன் காரணத்தில் ஒவ்வொரு இந்தியனும் சக இந்தியனால் மொழி, மதம், இனம், ஜாதி என பலவித ஆதிக்கத்திற்கு ஆளாகிறான். ஒவ்வொரு மாநில மக்களும் சக மாநிலத்தவர் மீது எந்நேரமும் ஏதேனும் ஒரு வித ஆதிக்கம் செலுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
அதன் காரணத்தினால் இருவரின் சுதந்திரமும் பறிபோய் இருவருமே அறிவை முன்னேறவேண்டிய வழியில் செலவிடாமல் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுத்துகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள இன மக்களில் சிலர் ஆதிக்க மனப்பான்மையும் சிலர் அடிமை மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பதால், இந்தியா என்பதை கருவியாக பயன்படுத்தி ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் எல்லா வித அதிகார மையங்களையும் கைப்பற்றிவிடுவதுடன், பொருளாதாரத்திற்கான வழிகளையும் தங்கள் வசப்படுத்தி விடுகின்றனர்.
மேலும், எங்கும் எதிலும் தாங்கள் மட்டுமே முண்ணனியில் இருக்க வேண்டும் எனும் ஆதிக்க வெறியுடன் மற்றவர்களை ஒடுக்குகின்றனர். ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மற்ற மொழி இன மக்களுக்கிடையே செயற்கையாக பிரச்சனைகளை தோற்றுவித்து அவைகள் எப்போதும் தொடரும்படி பார்த்துக்கொள்கின்றனர்.
சுருக்கமாக சொன்னால் முன்னேற விரும்பும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் எந்நேரமும், ஜாதி மதம் மொழி இனம் என பல வித ஆதிக்கம் கொண்ட மக்களை தூங்கி சுமக்கின்றனர். யார் யாருக்காகவோ யார் யாரோ உழைக்கிறார்கள். எந்நேரமும் ஒருவரை ஒருவர் சுரண்டுகிறார்கள். அந்த சுரண்டலுக்கு இந்தியா எனும் கட்டமைப்பு பாதுகாப்பாக இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவின் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக உருவாகி மற்ற மாநிலங்களின் ஆதிக்கமின்றி தன்னுடைய கலாச்சார பண்பாடுடன் சுயமாக இயங்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் இந்தியா உடைந்தால் மட்டுமே இந்திய வளர்ச்சி சாத்தியம். இந்தியா உடைவது இந்தியர்கள் அனைவருக்குமே நல்லது. இந்தியா இந்தியாவாக இருக்கும் வரை வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை.
இந்தியா எனும் கட்டமைப்பு சுரண்டி கொழுக்கும் முதலாளிகளுக்கும் இன, மொழி, மற்றும் மத வெறி கொண்ட, மலையாளிகள் மற்றும் பார்ப்பன பாசிச வெறி பிடித்த ஆரியர்களுக்குமே பயனுள்ளதாக இருக்கும்.
மற்ற இன, மொழி யை சார்ந்த மக்கள் எவ்வளவு தான் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களால் இந்தியாவில் வளரவே முடியாது என்பதே உண்மை.
மேலும், தேசிய மொழி என ஒன்று இல்லாதவரை இந்தியா எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடிய அபாயம் இருப்பதாலேயே தேசிய மொழியை திணிக்க முயல்கிறார்கள். மேலும், இந்திய தேசியத்தை எப்போதுமே தமிழகம் கேள்விக்குள்ளாக்கியே வருவதாலேயே தமிழகத்தையும் தொடர்ந்து ஒடுக்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு இந்தியாவை உடைப்பதே. இந்தியா உடைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியர்கள் அனைவரிடமும் பரப்புரை செய்து வன்முறையின்றி பிரிவினைக்கு வழிவகுக்க இந்த சுதந்திர நாளிலேனும் முடிவேற்போம். நாமும் ஐரோப்பாவிற்கு இணையாக வளர்ச்சியடைவோம்.

No comments:

Post a Comment