Sunday 14 August 2016

தாயின் மணிக்கொடி


* மான்சாண்டோ பருத்தியில் நெய்த
மணிக்கொடி பறக்குதடி-தாயின் மணிக்கொடி பறக்குதடி!!
* விவசாயி தொங்கிய தூக்கு கயிறில் 
விண்நோக்கி பறக்குதடி-எம்
விவசாயம் வேரோடு இறக்குதடி!!
* உச்சியில் சென்று பறக்குதடி-ஆனால்
உலகமயம் வாழ்க என உரைக்குதடி!!
* பன்னாட்டு முதலாளியின் பாசக்கயிற்றில்
பட்டொளி வீசி பறக்குதடி -எம்
பாட்டாளி குரல்வளை நெறிக்குதடி!!
* காலனி -அரை காலனி ஆனதடி -எம் நாடு
புதிய காலணியாய் போனதடி!!
* விதேசியின் சுதந்திரம் வெல்லுதடி-அதுமறுக்கும்
விடுதலை வீரரை கொல்லுதடி!!
* வீரர் விட்டு சென்ற விடுதலை போரை தொடர்வோமடி-நாம்
செம்படையை கட்டி படர்வோமடி!!
* செந்தளம் நின்று செங்கொடி ஏற்ற
சிந்தனை கொள்வோமடி -எதிரில் துரோகி எவன்வரினும்
சிரமறுத்து கொல்வோமடி!!- பகத்சிங் பாரதி

No comments:

Post a Comment